பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்:நெல்லை தலைமையாசிரியர் கைது
arrest, head masters, school student, sexual harassment, tamil nadu, tirunelveli March 22, 2017,
திருநெல்வேலி: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை அடுத்துள்ள சிங்காரத்தோப்பில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.அங்கு தலைமையாசிரியராக திருக்குறுங்குடி, மகிழடியை சேர்ந்த நம்பிராஜன் 49, பணிபுரிகிறார்.இவர் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தொடுதலில் தவறாக நடந்துள்ளார்.இதுகுறித்து சிறுமிகள் தங்க
ள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து புகார் வந்தது. எனவே சமூகநலத்துறையின் குழந்தைகள் நல பணியாளர் ஜான்சிராணி இதுகுறித்து புகார் அளித்தார்.வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று(மார்ச்-21)மாலையில் தலைமையாசிரியர் நம்பிராஜனை கைது செய்தனர்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.