துரோகி எனது மகனில்லை: பயங்கரவாதியின் தந்தை கண்ணீர்

India, ISIS, lucknow, saipulla, terrorist attack, UP
லக்னோ: லக்னோவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதி சைபுல்லாவின் உடலை வாங்க முடியாது என அவரது தந்தை கூறியுள்ளார்.

தேசவிரோதம்:

இது தொடர்பாக சைபுல்லாவின் தந்தை சர்தாஜ் கூறியதாவது: ஒரு துரோகி எனது மகனாக இருக்க முடியாது. நாங்கள் இந்தியர்கள். நாங்கள் இங்கு தான் பிறந்தோம். எங்களது மூதாதையர்களும் இங்கு தான் பிறந்தனர்.

சைபுல்லா செயல் நாட்டின் நலனுக்கு எதிரானது. ஒரு தேச விரோதியின் உடலை நாங்கள் வாங்க மாட்டோம். அவர் ஏன் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார் என்பது பற்றி தகவல் இல்லை.
கடந்த 2 மாதத்திற்கு முன்னர் வேலைக்கு செல்லாததால், சைபுல்லாவை நான் அடித்தேன். கடந்த திங்களன்று எனக்கு போன் செய்து, நான் சவுதி செல்லப்போவதாக சைபுல்லா தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

அதிர்ச்சி:

சைபுல்லாவின் உறவினர் ஒருவர் கூறியதாவது: சைபுல்லாவின் செயல் எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் எங்களிடம் நன்றாக தான் நடந்து கொண்டார். தினமும் தொழுகை நடத்தினார். சைபுல்லா இவ்வாறு செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

English summary:

Lucknow: Lucknow, killing ISIs., The body of terrorist saifulla said his father could not afford.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top