அமெரிக்காவில் இந்திய பெண் துன்புறுத்தல்
america, US, washing ton, women, world March 3, 2017,
வாஷிங்டன்: அமெரிக்காவில் பணி முடித்து வீடு திரும்பிய இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் இனவெறி ரீதியில் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
துன்புறுத்தலுக்கு ஆளான ஏக்தா தேசாய் என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட செய்தி: பணிமுடித்து விட்டு ரயிலில் திரும்பும்போது, மர்மநபர் ஒருவர் தன்னை திட்டினார். ஆனால் நான் அதனை கண்டுகொள்ளவில்லை. இதன் பின்னர் எனது அருகில் அமர்ந்திருந்த ஆசிய கண்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை அவதூறாக பேசினார். தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக்கத்தினார். அவரின் செயலை மொபைலில் படம் பிடிக்க முயற்சி செய்த போது, தடுக்க முயற்சி செய்தார். யாரையும் தொடாத அந்த நபர், வார்த்தைகளால் எங்களை காயப்படுத்தினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரில், தெலுங்கானாவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இந்த தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English summary:
Washington: Indian-American woman from returning home after work in the racially persecuted in the incident, police said.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.