ஒருமுறை ஓட்டு போட்டு மூன்று முதல்வர்களை கண்ட தமிழர்கள் நாம்!

AIADMK, New CM, OPS, sasikala, tamil nadu
தமிழக முதல்வராக சசிகலா நடராஜன் பதவியேற்க உள்ளது தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. கடந்த மே 16-ஆம் தேதி 15-வது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஆட்சியை தொடர்ந்தது.

ஒரு வருடம் கூட முடிவடையவில்லை, ஆனால் அதற்குள் மூன்று முதல்வர்கள் வர உள்ளனர். ஒரே ஒருமுறை தான் மக்கள் ஓட்டு போட்டார்கள், ஆனால் மூன்று முதல்வர்களை காண உள்ளனர் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்ததையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்றாவது முதல்வராக தற்போது சசிகலா பதவியேற்க உள்ளார்.

நேற்று அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக அறிவித்தனர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

the people of TN are so lucky in one way.. you just have to cast your vote once and you get to see three Chief Ministers.. WHATTE WAAAWWW !
— Dhaya Alagiri (@dhayaalagiri) February 5, 2017

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவைத்தவர்கள். ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர்கள். வாவ்.. என டுவீட் செய்துள்ளார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top