புழல் சிறையில் ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் சோதனை.. ஆய்வுக்கு பின் நீதிபதிகள் சொன்னது என்ன?
Uncategorized March 6, 2025,

சென்னை புழல் மத்திய சிறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் திடீரென சோதனை மேற்கொண்டனர். சிறை வளாகம் முழுவதும் சுற்றிப் பார்த்த அவர்கள், கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதாகவும், வாரத்தில் இரண்டு முறை சிக்கன் மற்றும் முட்டையுடன் சுகாதாரமான உணவு கைதிகளுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், கைதிகள் வாரத்தில் மூன்று முறை வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் வசதி பெற்றுள்ளனர். ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதிகள் மாதம் ரூ.7,500 சம்பளத்துக்கு பெட்ரோல் பங்கில் பணிபுரிகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதேசமயம், இலவச சட்ட ஆலோசனை வழங்க, வெளிநாட்டு கைதிகளுக்கு தொலைபேசி வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், சிறை மருத்துவமனைக்கு சிறந்த உள் கட்டமைப்பு தேவை என்றும் நீதிபதிகள் சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் புழல் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran
….
Source: Webduniya
Read More >> புழல் சிறையில் ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் சோதனை.. ஆய்வுக்கு பின் நீதிபதிகள் சொன்னது என்ன?