எட்டயபுரம்: கொலை வழக்கில் கைதானவர் தப்பி ஓட முயற்சி; துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்
Uncategorized March 6, 2025,
கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தில் தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முனீஸ்வரன் போலீஸாரை தாக்கி விட்டு தப்பி ஓடும்போது துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் உதவி ஆய்வாளர் உட்பட 2 போலீஸார் காயமடைந்தனர்.
எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பூவன். இவரது மனைவி சீதாலட்சுமி (75). பூவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகள் ராம ஜெயந்தி (45). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்த ராமஜெயந்தி தனது தாய் சீதா லட்சுமியுடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்தார். கடந்த 2-ம் தேதி தேவலாயத்துக்கு சென்று விட்டு இருவரும் வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் சீதாலட்சுமியும் அவரது மகள் ராமஜெயந்தியும் வீட்டுக்குள் சடலமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் 3-ம் தேதி எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
….
Source: Hindu
Read More >> எட்டயபுரம்: கொலை வழக்கில் கைதானவர் தப்பி ஓட முயற்சி; துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்