சத்தீஸ்கரில் காய்கறிகளை சாலையில் கொட்டி எதிர்ப்பு: உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி

சத்தீஸ்கரில் காய்கறிகளை சாலையில் கொட்டி எதிர்ப்பு: உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி

chandigarh, farmer, India, raipur, vegetable
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காய்கறி விலை வீழ்ச்சி அடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதனை சாலைகளில் கொட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அம்மாநிலத்தின் சூரஜ்பூர், ஜம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்காளி, முட்டைகோஸ், காளிபிளவர் போன்ற காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறிகள் நன்கு விளைந்தபோதிலும் சந்தையில் அதற்குரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்திக்குள்ளாகினர்.

இதனால் காற்கறிகளை மூட்டை மூட்டையாக வாகனங்களில் ஏற்றிவந்த அவர்கள், சூரஜ்பூர் மார்க்கெட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி தங்கள் அதங்கத்தை வெளிப்படுத்தினர். போக்குவரத்து மிகுந்த சாலையில் மூட்டை மூட்டையாக காய்கறிகளை விவசாயிகள் சாலையில் கொட்டியது காண்போரை வேதனை அடைய செய்துள்ளது.

English summary:

Raipur: Chandigarh farmers affected by the fall in vegetable prices expressed their opposition to the streets to vent. Curajpur of the state, including the districts jampur tomato, cabbage, cauliflower such vegetables are cultivated on a large scale. The price of vegetables in the market because of lack of well  farmers. 

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top