பெற்ற மகனை கொல்ல கூலிக்கு ஆள் தேடிய தாய் கைது!
Uncategorized July 20, 2023,

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் 3 வயது மகனை கொல்லை கூலிக்கு ஆள் தேடியபோது, போலீஸாராக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் மாணவர்கள் ஆயுதங்கள் பயன்படுத்துவது, போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில்,அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் 3 வயது மகனை கொல்ல கூலிக்கு ஒரு கொலையாளியை தேடி வந்துள்ளார்.
இதுபற்றி, அவர் ஒரு வலைதளத்தில் தேடியபோது, அந்த வலைதளம் வேடிக்கையாக உருவாக்கப்பட்டதால், இந்த வலைதளத்தை நடத்துபவர்கள் இதை போலீஸில் கூறிவிட்டனர்.
வார இறுதிக்குள் மகனைக் கொல்ல கூலிக்கு ஒரு கொலையாள் வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டு, தன் மகன், வசிப்பிடம் ஆகியவற்றையும் அதில் பகிர்ந்துள்ளார். அவரது வீட்டிற்கு போலீஸார் ப ஒரு கொலையாளி போல் சென்ரு கொலை செய்ய பேரம் பேசி ஒரு கொலைக்கு இதைச் செய்ய ஒப்புக் கொண்ட பின்னர், மீண்டும் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, அவர் மீது வழக்குகள் பதிவு செய்து, அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
அவர் தன் மகனை ஏன் கொலை செய்ய திட்டமிட்டார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
….
Source: Webduniya
Read More >> பெற்ற மகனை கொல்ல கூலிக்கு ஆள் தேடிய தாய் கைது!