அழிவுகாலம் ஆரம்பமாகிவிட்டது என்று பிரேமலதா கூறியதற்கு அண்ணாமலை கொடுத்த பதில்..!
Uncategorized December 26, 2025,n
n 
n
n
n
n
n தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என தகவல் வெளியானதை தொடர்ந்து, தமிழக அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
n
n
n
n இந்த தகவலால் கடும் அதிருப்தியடைந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிகவுக்கு 6 இடங்கள் என செய்தியை பரப்பிய கட்சிக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது” என ஆக்ரோஷமாக எச்சரிக்கை விடுத்தார். இது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
n
n
n
n இவ்விவகாரம் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்த புகாருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; இதை யாரிடம் சொன்னார்களோ அவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறி நழுவிக்கொண்டார்.
n
n
n
n மேலும், ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழுவில் பிரேமலதா தனது இறுதி முடிவை அறிவிப்பார் என்றும், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் ஜனவரி 20-க்குள் நல்ல முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். இந்த கருத்துக்கள் அதிமுக கூட்டணி மற்றும் மூன்றாவது அணி குறித்த விவாதங்களை தமிழகத்தில் மீண்டும் சூடுபடுத்தியுள்ளன.
n
n
n
n Edited by Siva