திருமலை திருப்பதியில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Uncategorized

n

n

n

n

n  

n

n திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்களின் வருகை மிக அதிக அளவில் உள்ளதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஸ்ரீவாணி ஆஃப்லைன் தரிசன டிக்கெட்டுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

n

n  

n

n திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பின்படி, டிசம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று தினங்களுக்கு நேரடியாக வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ. 10,000 நன்கொடை வழங்கி பெறப்படும் விஐபி பிரேக் தரிசன அனுமதியானது, திருமலையில் உள்ள கவுண்டர்கள் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இந்த நாட்களில் வழங்கப்படாது.

n

n  

n

n ஏற்கனவே இணையதளம் வழியாக முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த ரத்து பொருந்தாது. நேரடியாக வந்து டிக்கெட் பெற்று தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்த பக்தர்கள், இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. 

n

n  

n

n புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்பான மற்றும் எளிமையான தரிசனத்தை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

n

n  

n

n Edited by Mahendran

Search

Back to Top