விஜயின் காரை மறித்த நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி!.. தவெகவில் அதிர்ச்சி…

Uncategorized

n

n ajitha

n

n
nதமிழக வெற்றிக் கழகத்தில் திருச்சி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. ஆனால் தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல் என்கிற பெண் நிர்வாகி தனது பெயர் மாவட்ட செயலாளர் பட்டியலில் இல்லை.. நான் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்திருக்கிறேன் என்று சொல்லி இரண்டு நாட்களுக்கு முன்பு பனையூர் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து கேள்வி எழுப்பினார். மேலும், விஜயை சந்தித்து பேசவும் அவர் காத்திருந்தார்.
n
nவிஜயின் கார் அங்கே வந்தபோது காரை வழிமறித்து விஜயிடம் பேச முயன்றார். ஆனால் அதையும் மீறி விஜய் உள்ளே சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. அதன்பின் தவெக முக்கிய நிர்வாகி சிடி நிர்மல் குமார் அஜிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நான் அஜித்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருக்கு பதவி கொடுக்கப்படும் என சொன்னதால் போராட்டத்தை கைவிட்டார் அஜிதா.
n
nஅஜிதாவின் செயல் தவெக நிர்வாகிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே சமூக வளைத்தளங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். குறிப்பாக ‘இவர் திமுகவின் கைக்கூலி.. திமுக சொல்லித்தான் அவர் இப்படி செய்கிறார்.. இவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்’ என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் அஜிதாவோ ‘உயிர் உள்ளவரை நான் தவெகவில் மட்டுமே இருப்பேன்.. தளபதிதான் என் தலைவர்.. எனது கடைசி மூச்சு உள்ளவரை கட்சிக்காக உழைப்பேன்’ என டிவிட்டரில் பதிவிட்டார். ஆனாலும் விஜய் ரசிகர்களும், தவெகவினரும் அஜிதாவை தொடர்ந்து விமர்சித்து வந்தார்கள்.
n
nஇந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக அஜிதா தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுகவின் கைக்கூலி என தொடர்ந்து சொல்லியதால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அஜிதாவின் குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்திருக்கிறார்கள்.
nஇந்த சம்பவம் தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Search

Back to Top