கஞ்சா விற்ற 21 வயது பெண் சாப்ட்வேர் பொறியாளர்.. காதலனுடம் உடந்தை.. கூண்டோடு கைது

Uncategorized

n

n

n

n

n

n

n  

n

n ஹைதராபாத்தில் போதைப்பொருள் விற்பனை நெட்வொர்க்குடன் தொடர்புடைய 21 வயது பெண் மென்பொருள் பொறியாளர், அவரது காதலர் மற்றும் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு ரகசிய சோதனையின் போது கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

n

n  

n

n கைது செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் சுஷ்மிதா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடன் அவரது காதலர் இம்மானுவேல் விநியோகஸ்தராக செயல்பட்ட சாய் குமார் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் அய்யப்பா ஆகியோரும் பிடிபட்டுள்ளனர். ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் கூற்றுப்படி, இம்மானுவேல் மற்றும் லில்லி ஆகிய இருவரும் இணைந்து இந்த சட்டவிரோத நெட்வொர்க்கை நடத்தி வந்துள்ளனர்.

n

n  

n

n விசாரணையில், இம்மானுவேல் டார்க் வெப் மற்றும் டார் பிரவுசர் மூலம் சர்வதேச விநியோகஸ்தர்களிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கியது தெரியவந்துள்ளது. பணப்பரிமாற்றத்தை மறைக்க 'பைனான்ஸ்' மற்றும் 'ட்ரஸ்ட் வேலட்' போன்ற கிரிப்டோகரன்சி தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

n

n  

n

n மென்பொருள் பொறியாளரான லில்லி, இம்மானுவேல் இல்லாத நேரத்தில் ஆன்லைன் பரிமாற்றங்கள் மற்றும் விநியோகங்களை கவனித்து வந்துள்ளார். இவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

n

n  

n

n Edited by Siva

Search

Back to Top