’ஓபிஎஸ் என்னை முதல்வராகும்படி வலியுறுத்தினார்..’ : சசிகலா
Uncategorized February 5, 2017,
அதிமுக எம்.எல்.ஏ.க்கள். கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 9-ம் தேதி சசிகலா, முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இன்று எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, ’ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தான் என்னை முதல்வர் ஆகும்படி வற்புறுத்தினார். மக்களுக்காகவே அதிமுக அரசு செயல்படும். ஜெயலலிதாவின் கொள்கைகள் கட்டி காக்கப்படும்’, என்று உறுதியளித்துள்ளார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.