இ.அகமது எம்.பி. மரணத்தில் சந்தேகம் எழுப்பும் டி.ராஜா
Uncategorized February 5, 2017,
இ.அகமது எம்.பி. மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.
கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, சென்னை துறைமுக கப்பல் விபத்தில் ஆயில் கசிந்தது தேசிய பேரிடராக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கடலில் கசிந்த எண்ணெயின் அளவு என்ன என்பதில் பல்வேறு முரண்பாடு உள்ளது. இதனை அரசு தெளிவு படுத்த வேண்டும்.
மீனவர் பிரச்னைக்கு முக்கிய காரணமான கச்சத்தீவை மீட்க வேண்டும். இதன்மூலம் தமிழக மீனவ பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இறந்த எம்.பி. இ.அகமது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதை தீர்க்கவேண்டியது மத்திய அரசின் கடமை" என கூறினார்.
செய்தி, படம்: ராம்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.