அன்புமணி நலம்; நாளை வீடு திரும்புகிறார்
Uncategorized February 5, 2017,
மருத்துவர் அன்புமணி நலமாக இருப்பதாகவும், நாளை வீடு திரும்புகிறார் என்றும் பா.ம.க. தலைமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பா.ம.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி நேற்று காலை தருமபுரி தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ஓய்வின்றி தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் அவருக்கு சோர்வும், லேசான தலைச்சுற்றலும் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவிலுள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் அவருக்கு முழுமையான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்பதும், உடல்நிலை இயல்பாக இருப்பதும் தெரியவந்தது. எனினும், அவருக்கு ஓய்வு தேவை என்பதால் ஒருநாள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி இன்று ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு அன்புமணி நாளை இல்லம் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.