மெரினாவில் 144 தடை உத்தரவு வாபஸ்!
Uncategorized February 4, 2017,
சென்னை மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகச் சென்னை மெரினாவில் இளைஞர்கள், பொதுமக்கள் என பல லட்சம் பேர் திரண்டு தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது, இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர். இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி முதல், மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 5 பேருக்கு மேல் சேர்ந்து வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 'கடந்த சில நாட்களாக நிலைமை கட்டுக்குள் இருப்பதால், இன்று மெரினா கடற்கரையில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. முக்கியமாக, சென்னை மாநகர காவல் சட்டப்படி 41-ன் கீழ் மெரினா கடற்கரையில் கூடுவது தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் தொடரும்,' என்றும் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.