நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி…!

Uncategorized

சென்னையில் 'யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா' அமைப்பு சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று, விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். 

விழாவில் பேசிய அவர், "நான் நடிகன் என்பதை விட, ஆன்மிகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். எனது ஆன்மிக தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 'நான் யார்' என்று எனக்குள் கேள்வி கேட்பதை ரமண மகரிஷி மூலம் கற்றுக்கொண்டேன். ராகவேந்திரரிடம் பக்தியைக் கற்றுக்கொண்டேன். பரமஹம்ச யோகானந்தரின் சுய சரிதைப் புத்தகம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது." என்று ஆன்மிகம் தொடர்பாக மனம் திறந்து பேசினார்.

படங்கள்: ஜெரோம்

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top