தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார் விஷால்!
Uncategorized February 4, 2017,
தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி இடுவதற்கான மனுவை தாக்கல் செய்தார் நடிகர் விஷால். அவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கான மனுவை தாக்கல் செய்தபோது, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், மிஷ்கின், ஆர்யா, இயக்குநர்கள் பாண்டிராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரவின் காந்தி, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். விஷால் ஏற்கெனவே, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: ஆ.முத்துக்குமார்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.