தமிழகத்தை பா.ஜ.க வஞ்சிக்கிறது -கி.வீரமணி

Uncategorized

தமிழ்நாட்டை, பாஜக தொடர்ந்து வஞ்சித்து வருவதாக திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டி உள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், மத்திய அரசு தமிழ்நாட்டை பார்க்கும் விதமே மாறிவிட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

முக்கியமாக தமிழ்நாட்டில் இனி பா.ஜ.க.வால், ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற சூத்திரத்தை தெரிந்துகொண்டதால், தமிழகத்தை பாஜக தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் அவர் புகார் கூறினார்.

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆவணக்கொலைகளுக்கு எதிராக, வரும் 13-ம் தேதி அரியலூரில் திராவிடக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

– -சே.சின்னதுரை
படம்: வி.சதீஷ்குமார் 

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top