சொல்வது டிஜிட்டல் இந்தியா; கழிவை அள்ளுவது வாளியில்..! கனிமொழி கிண்டல்

Uncategorized

டிஜிட்டல் இந்தியா என அரசு கூறுகிறது; ஆனால் கழிவை வாளியில் அகற்றம் நிலைதான் உள்ளது என்று திமுக எம்பி கனிமொழி கிண்டல் செய்துள்ளார்.

எண்ணூர் கடற்பகுதியில் எண்ணெய் படிந்துள்ளதை இன்று திமுக எம்பி கனிமொழி இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

கடலோர பகுதி மக்கள் நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்த கனிமொழி, எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், சில நாட்களில் எண்ணெய் படலத்தை அகற்றுவது என்பது சாத்தியமில்லாதது என்றும் கூறினார்.

மேலும், டிஜிட்டல் இந்தியா என அரசு கூறுகிறது; ஆனால் கழிவை வாளியில் அகற்றம் நிலைதான் உள்ளது என கனிமொழி கிண்டல் செய்தார்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top