குளத்தில் இறங்கி சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றினார் வைகோ!
Uncategorized February 4, 2017,
நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி அருகே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றினார்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில், வைகோ இன்று சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினார். நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி அருகே மேலமரத்தோணி பெரியகுளத்தில் கிராம மக்களுடன் சேர்ந்து சீமைக் கருவேல மரங்களை வெட்டி வைகோ அகற்றினார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.