எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜல்லிக்கட்டு! உலகம்பட்டியில் கோலாகலம்

Uncategorized

திண்டுக்கல் மாவட்டம், உலகம்பட்டியில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமானோர் குவிந்தனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். உச்ச நீதிமன்றமும், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தடையின்றி நடந்து வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், உலகம்பட்டியில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ சோதனையை டாக்டர்கள் நடத்தினர். உடல் தகுதியுடன் இருந்த காளைகள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன. 400 காளைகளை பிடிக்க 500 காளையர்கள் களமிறங்கினர்.

வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளைகள் விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக விடப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top