#Budget2017: தெற்கு ரயில்வேக்கு ரூ.3,493 கோடி ஒதுக்கீடு
Uncategorized February 2, 2017,
தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.3,493 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தை, மூன்றாவது முனையமாக மாற்றும் பணிகள் மார்ச் மாதத்தில் முடிவடையும். மேலும், சென்னை சென்ட்ரல் முதல் கோழிக்கோடு வரை இருப்புப் பாதைகள் மேம்படுத்தப்படும். அதேபோல், திண்டுக்கல் – சபரிமலை, மொரப்பூர் – தர்மபுரி வரையில் புதிய இருப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்' என்றார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.