சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு செக் வைத்த உயர் நீதிமன்றம்

Uncategorized

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது கீழ் நீதிமன்றம் விடுவித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து சுசீலா என்பவரிடம் உரிய அனுமதியின்றி பணம் பெற்றதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை விடுவித்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் இருந்து  சசிகலா, அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோரை கீழ் நீதிமன்றம் விடுவித்ததை ரத்துசெய்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவால் அந்நியச் செலாவணி குறித்த விசாரணை மீண்டும் தொடங்க இருப்பது சசிகலா தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Source: சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு செக் வைத்த உயர் நீதிமன்றம் – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top