எண்ணெய் கசிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
Uncategorized February 2, 2017,
எண்ணூரில், கடந்த வாரம் இரு சரக்கு கப்பல்கள் மோதியதில், கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன. மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விபத்து தொடர்பாக, இரு கப்பல் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக அதிவ நவீன தொழில் நுட்ப கருவிகளை பயன்படுத்தி, எண்ணெய் படலங்களை வேகமாக அகற்ற வேண்டும்' என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.