தென் அமெரிக்க நாடான சிலியில் பயங்கர காட்டுத் தீ : 10 லட்சம் ஏக்கர் வனப்பரப்பு பாதிப்பு
forest fire, santiago, south american, world January 30, 2017,
சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலியின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டு தீயில் சுமார் 10 லட்சம் ஏக்கர் வனப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. கொளுந்து விட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க மற்றும் ரஷ்ய விமானங்களும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விஷமிகளால் உள்நோக்கத்துடன் இந்த தீ வைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாக சிலி அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காட்டு தீயில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்திற்கு காரணம் ஒரு பெண்ணாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அண்டை நாடுகளை சேர்ந்தோருக்கும் இந்த தீ வைப்பு சம்பபவத்தில் தொடர்பு இருப்பதாக சிலி அரசு கூறியுள்ளது.
English summary:
Santiago: Chile in the South American country in the terrible forest fire trapped 11 people lost their lives miserable. Chile’s central and southern part of the island, about 10 million acres of forest in the sudden surrounding affected.
Source: தென் அமெரிக்க நாடான சிலியில் பயங்கர காட்டுத் தீ : 10 லட்சம் ஏக்கர் வனப்பரப்பு பாதிப்பு – G-News
Leave a comment
You must be logged in to post a comment.