மோடி ரேடியோ நிகழ்ச்சிக்கு அனுமதி
election commission of india, India, narendra modi, New delhi January 28, 2017,
புதுடில்லி: மாதம்தோறும் நடக்கும் ரேடியோ நிகழ்ச்சியான மன்கிபாத் வழக்கம்போல் நாளை நடக்கும் இதற்கான அனுமதியை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உ.பி., பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திரமோடியின் ரேடியோ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சில அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
சமூகவலை தளங்கள் மூலம் :
ஆனால் இது நாடு தழுவிய அரசின் நிகழ்ச்சி என்பதால் மன் கி பாத் நாளை வழக்கம் போல் நடக்கும். இதற்கு தடை ஏதுமில்லை என தேர்ல் கமிஷன் மூத்த அதிகாரி கூறினார். இறுதி வார ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பிரதமரிடம் சமூகவலை தளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸ் மூலம் கேள்வி கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
NEW DELHI: mankipat radio show will take place every month, as usual, which will take place tomorrow have been given permission by the Election Commission said its top official.
Source: மோடி ரேடியோ நிகழ்ச்சிக்கு அனுமதி – G-News
Leave a comment
You must be logged in to post a comment.