நாட்டை வளமாக்க உறுதியேற்க வேண்டும்: இளைஞர்களுக்கு கவர்னர் அறிவுரை

governor, India, mumbai, state responsibility, vidhyasagar rao
மும்பை: நமது முன்னோர்கள் கனவுப்படி நாட்டை வளமாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் எனு தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நமது முன்னோர்கள் கனவுப்படி நாட்டை வளமாக்க உறுதியேற்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. மும்பையில் தேசியக்கொடி ஏற்றியதால், தமிழகத்தில் தேசியக்கொடி ஏற்ற முடியவில்லை. ஜெயலலிதாவின் அம்மா உணவக திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் ஏழைகளின் சுமையை குறைத்துள்ளன. இந்த திட்டங்களை மற்ற மாநிலங்களும், பிற நாடுகளும் பின்பற்ற துவங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடக்க கல்வி பெறுவோர் 99. 85 சதவீதம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர் கல்வி பெறுவோரின் சதவீதம் தேசிய அளவை விட அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary:

MUMBAI: State responsibility for our ancestors our dream country must resolve to enrich young governor said Rao. 

Source: நாட்டை வளமாக்க உறுதியேற்க வேண்டும்: இளைஞர்களுக்கு கவர்னர் அறிவுரை – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top