மேனகா காந்தி மனுத் தாக்கல் செய்யவில்லை: நிர்மலா சீதாராமன் தகவல்

India, Jallilkattu, maneka gandhi, nirmala sitharaman, supreme court
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், மேனகா காந்தியை தொலைபேசியில் தான் தொடர்பு கொண்டு பேசியபோது ஜல்லிக்கட்டு தடைக்காக உச்சநீதிமன்றத்தில் மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்ததாகப் பதிவிட்டுள்ளார். விலங்கு நல ஆர்வலாக அறியப்படும் மேனகா காந்தி, முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

English Summary:

Jallikattu filed in the Supreme Court seeking a ban by the Union Minister Maneka Gandhi Nirmala Sitharaman explained that the information published is absolutely wrong.

Source: மேனகா காந்தி மனுத் தாக்கல் செய்யவில்லை: நிர்மலா சீதாராமன் தகவல் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top