மே.வங்கத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விபத்து: 4 பேர் பலி

Accident, India, kolkata, west bengal
கோல்கட்டா:மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தின் மெஹியா பிளாக்கில் உள்ள கலிகப்பூர் கிராமத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் மண் சரிவில் சிக்கி மாயமாகி உள்ளனர்.

நிலக்கரி சுரங்கரத்தில் பணி புரிந்த தொழிலாளர்களில் பலர் ஜார்காண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். விபத்துக்குள்ளான சுரங்கம் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இந்த சுரங்கம் சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அதற்குள் செல்ல விடாமல் அதன் நிர்வாகிகள் மற்றும் மாபியா கும்பல்கள் தடுத்து வந்ததாக அவர்கள் கூறினர்.

விசாரணை இல்லை:

அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய மாபியா கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த பகுதியில் இதுவரை விசாரணை ஏதும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேற்று இரவு வரை போலீஸ் அதிகாரிகள் யாரும் வரவில்லை கூறப்படுகிறது.

English summary:

KOLKATA: Bankura district of West Bengal state in Black mehiya kalikappur village collapsed coal mine accident in one miserable happened 4 people died in the accident. invisible others are stuck in the mud right.

Source: மே.வங்கத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விபத்து: 4 பேர் பலி – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top