பாட்னாவில் படகு கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி
bihar, boat accident, India, patna January 15, 2017,
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.
பாட்னாவில் மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி பட்டம் பறக்கவிடும் திருவிழா நடந்தது, விழாவில் பங்கேற்றுவிட்டு கங்கை நதியில் படகில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, நதியில் படகு திடீரென கவிழ்ந்தது. படகில் சென்ற 40 பேரும் நீரில் மூழ்கினர்.
இச்சம்பவத்தில், 21 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து மீ்ட்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும், நீரில் மூழ்கியர்வர்களின் சடலங்களை தேடி வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றியதே விபத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்திற்கு பிரதமர் மோடி, சோனியா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ. 2 லட்சம் வழங்க வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
English Summary:
Patna: Patna, Bihar state, 24 people were killed in an accident on the boat capsized.
Source: பாட்னாவில் படகு கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி – G-News
Leave a comment
You must be logged in to post a comment.