கரப்பான் பூச்சிக்காக ஆபரேசனை நிறுத்திய டாக்டர்

cockroach, hospital, thane, treatment india
தானே: தானேவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில், நடந்த கால் அறுவை சிகிச்சையின் போது, அங்கு கரப்பான் பூச்சி வந்ததால் சிகிச்சை பாதியில் நிறுத்தப்பட்டது.

தானே மாநகராட்சி சார்பில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை ராஜிவ் காந்தி மருத்துவ கல்லூரியுடன் இணைக்கப்பட்டது. கடந்த 2013ல் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் தற்போது ஊழியர் பற்றாக்குறை உள்ளது. இங்கு பல இடங்களில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்து வந்துள்ளது. இது பற்றி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அறுவை சிகிச்சை வளாகத்தில் கரப்பான் பூச்சியை பார்த்த மருத்துவர் ஒருவர் புகார் அளிக்கும் முன்னர் அதனை கொன்று விட்டார்.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு கால் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. சுத்தமாக இருக்க வேண்டிய அந்த அறையில், கரப்பான்பூச்சி வந்துள்ளது. இதனை பார்த்த டாக்டர், அறுவை சிகிச்சையை நிறுத்திவிட்டு, ஆதாரத்துடன் நிரூ பிப்பதற்காக அதனை படம் பிடித்தார். பின்னர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். தொடர்ந்து அந்த வீடியோவை டீனுக்கு அனுப்பி வைத்த அவர், இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

English summary:

Thane: Thane in the largest hospital in the leg during the operation, but there were roach Withdrawn treatment.

Source: கரப்பான் பூச்சிக்காக ஆபரேசனை நிறுத்திய டாக்டர் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top