இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்களை ஐ.நா.,விடம் அளித்தது பாக்.,

India, india-pakistan, islambad, New delhi
இஸ்லாமாபாத் : இந்தியாவுக்கு எதிராக குற்றம்சாட்டி வரும் பாக்., அது தொடர்பான ஆதாரங்களை ஐ.நா.,விடம் அளித்தது.

ஐ.நா.,விடம் சமர்ப்பிப்பு:

இந்தியா தங்களது உள் விவகாரங்களில் தலையிட்டு, பயங்கரவாதத்தை தூண்டி விடுவதாக பாக்., தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் பாக்., தூதர் மலீகா இதுதொடர்பான ஆதாரங்களை ஐ.நா., பொதுச்செயலர் குட்டரெஸிடம் அளித்தார். மேலும் அதனுடன் பாக்., அளித்த கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இந்தியா உளவாளி குல்பூஷன் ஜாவத் பலுசிஸ்தானில் கைது செய்யப்பட்டார். ரா உளவு அமைப்பை சேர்ந்த அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அசாதாரண சூழ்நிலைகளை உருவாக்க இந்தியா முயல்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக ஐ.நா.,விடம் பாக்., ஆதாரத்தை சம்ர்ப்பிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary:

Islamabad : India and Pakistan against alleged., That the evidence related to the UN, was told.

Source: இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்களை ஐ.நா.,விடம் அளித்தது பாக்., – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top