எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யுங்கள்: ராகுல் பேச்சு

India, modi, pahraic, rahul gandhi
பஹ்ரைச்: பிரதமர் மோடி, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் கூற வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

பதில் வேண்டும்:

உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஊழல் தொடர்பான எனது குற்றச்சாட்டுக்கு பதில் கூறாத பிரதமர், கிண்டல் செய்கிறார். பிரதமர் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆனால், ஊழல் தொடரபான எனது குற்றச்சாட்டுக்கு பதில் கூற வேண்டும். இதுவரை பிரதமர் பதில் கூறவில்லை. கேள்வி எழுப்பினால், அதற்கு கிண்டல் செய்வதையே பதிலாக பிரதமர் தருகிறார் பிரதமர் முறைகேட்டில் ஈடுபட்டாரா இல்லையா என்பதே தற்போதைய கேள்வி.

தோல்வி:

ரூபாய் நோட்டு வாபஸ் தோல்வி திட்டம். ஏழைகளுக்கு எதிரான திட்டம் இதுபற்றி பார்லிமென்டில் ஒரு வார்த்தை கூட பிரதமர் பேசவில்லை. பணக்காரர்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லை. தினக்கூலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து பிரதமர் மவுனம் காக்கிறார். அனைத்து பணமும் கறுப்பு பணம் அல்ல எனக்கூறினார்.

English Summary:

Pahraic: Modi, can tease me as much as you want. But to answer to charges of corruption, Rahul said.

Source: எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யுங்கள்: ராகுல் பேச்சு – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top