விரைவில் வருகிறது புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் – ரிசர்வ் வங்கி

India, mumbai, Reserve bank of india
மும்பை: விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 இருப்பினும் ரூபாய் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவிலே புழக்கத்தில் உள்ளதால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 100 ரூபாய் நோட்டுகளில் R என்ற உள்ளீட்டு எழுத்துரு இருக்காது என்றும் அதற்கு மாற்றாக வேறு சில பாதுகாப்பு அம்சங்கள் புதிதாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதே நேரம் தற்போது புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாய் நோட்டுகள் தொடந்து செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.

English summary:

 RBI made a statement over hundred notes crisis in the country. In soon RBI was going to release new hundred notes

Source: விரைவில் வருகிறது புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் – ரிசர்வ் வங்கி – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top