தமிழகம் முழுவதும் மெல்ல மெல்ல திரும்பும் இயல்பு நிலை.. மெடிக்கல் ஷாப் திறப்பு

chennai, jayalalitha, tamil nadu
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பகலில் மூடியிருந்த மருந்துக் கடைகள் மாலை 6 மணிக்கு மேல் திறக்கப்பட்டன. அனைத்திந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மருந்துக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பகல் முழுவதும் மூடியிருந்த நிலையில் இனறு மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன.

ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் இன்று காலை 6 மணி முதல் பெட்ரோல் பங்க் மூடப்பட்டிருந்தன. தற்போது மாலை 6 மணிக்கு மேல் பெட்ரோல் பங்க்குள் திறக்கப்பட்டன. தியோட்டர் காட்சிகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பேருந்து சேவைகள் இன்னும் சரிவர இயங்கவில்லை. ஓட்டல்கள், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டே உள்ளன.


English summary:

Pharmacies that remained shut during the day on Tuesday as a mark of respect to former Tamil Nadu chief minister J Jayalalithaa, who died on Monday night, after jayalalithaa’s funeral is over Pharmacies shops open

Source: தமிழகம் முழுவதும் மெல்ல மெல்ல திரும்பும் இயல்பு நிலை.. மெடிக்கல் ஷாப் திறப்பு – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top