மூவர்ண கொடி போர்த்தி கண்ணுறங்கும் ஜெ., – கண்ணீர் கடலில் மக்கள்
chennai, jayalalitha, tamil nadu December 6, 2016,சென்னை: உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்து , மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது. ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
English summary:
Jayalalithaa’s body kept in Rajaji Hall where people can pay last respects
Source: மூவர்ண கொடி போர்த்தி கண்ணுறங்கும் ஜெ., – கண்ணீர் கடலில் மக்கள் – G-News

Leave a comment
You must be logged in to post a comment.