இந்திய ஏவுகணை சோதனை அமைதிக்கு அச்சுறுத்தலாம் : பாக்., புலம்பல்
India, islambad, missile test, pakistan January 12, 2017,
இஸ்லாமாபாத் : இந்தியாவின் ஏவுகணை சோதனைகள் மற்றும் திட்டங்கள் பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலானவை என ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையத்திடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.
குற்றச்சாட்டு:
ஏவுகணை தொழில்நுட்ப கட்டு
ப்பாட்டு மைய (MTCR) பிரதிநிதிகளை சமீபத்தில் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான கூடுதல் செயலாளர் தஸ்னிம் அஸ்லாம், இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்களுக்கான ஏவுகணை மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் ஆகியன தெற்காசிய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு உதவும் நோக்குடன் உருவாக்கப்பட்டது அல்ல என குற்றம்சாட்டி உள்ளார். மேலும் பாகிஸ்தான், சர்வதேச அணுஆயுத பரவல் தடுப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
எம்டிசிஆர் என்பது ஏவுகணை தொழில்நுட்பம் தொடர்பான கொள்கைகளின் அடிப்படையில் அணு ஆயுது பரவலை தடுக்கும் வகையில் வழிகாட்டுதல்களை வழங்கி வரும் அமைப்பாகும். 35 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பில் இந்தியா, சமீபத்தில் உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.
English summary:
Islamabad: India’s missile tests and missile technology programs as a threat to regional peace and stability, Pakistan has complained to the Control Center.
Source: இந்திய ஏவுகணை சோதனை அமைதிக்கு அச்சுறுத்தலாம் : பாக்., புலம்பல் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.