பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் பள்ளியில் சமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு
tami nadu October 14, 2018,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில் பணிபுரியும் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் சமையலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பெற்றொர் வலியுறுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓமலூர் அருகே குப்பன்கொட்டாய் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த சமையலர் ஓய்வு பெற்றதை அடுத்து, ஜோதி என்பவர் சமையலராக நியமிக்கப்பட்டார். இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால், சமைக்க அனுமதிக்கக் கூடாது என்றும், மீறி சமைக்க அனுமதித்தால் தங்களது குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றி விடுவதாகவும் பெற்றோர் தலைமையாசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.

இதையறிந்த மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, ஜோதியை சமையல் பணி மேற்கொள்ள சம்மதிக்க வைத்தனர். இந்நிலையில் ஜோதிக்கு எதிராக நடந்த தீண்டாமை கொடுமையை அறிந்த விடுதலை கட்சியினர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என மிரட்டல் விடுத்தவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் பள்ளியில் சமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு