திருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

திருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

tami nadu

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தையின் உடல் நாயிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார்நகர் வலம்புரி விநாயகர் ஆலயம் பகுதியில் நேற்று மாலை நாய் ஒன்று, பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் சிசுவை வாயில் கவ்விக்கொண்டு வந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தடிகள் கொண்டு நாயை விரட்டிய நிலையில் சிசு உயிரிழந்த சிசுவாக மீட்கப்பட்டது.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை போலீசார் சிசு உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை விசாரணையில், தொப்புள்கொடி நஞ்சுடன் முழு வளர்ச்சியடைந்த குழந்தையாக இருந்த அந்த சிசு பிறந்து சிலமணி நேரம் தான் ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.

குறைமாத பிரசவமாக கூட இருக்கலாம் என சந்தேகிக்கும் நிலையில், தவறான உறவில் பிறந்த குழந்தையா..? பெண் சிசு என்பதால் தூக்கி எறிப்பட்டதா..? என பல்வேறு கோணங்களில் மணப்பாறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தை எங்கு பிறந்தது, குழந்தையின் தாய் யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> திருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

Search

Back to Top