சேலம் ரயில் கொள்ளை வழக்கு – குற்றவாளிகள் 2 பேர் கைது

சேலம் ரயில் கொள்ளை வழக்கு – குற்றவாளிகள் 2 பேர் கைது

tami nadu

சேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயிலுடன் இணைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ரூ342 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து, சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ரயில் பெட்டியில் கொண்டு செல்லப்பட்ட ரூ5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ரயிலின் மேற்கூரையை துளையிட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தமிழக சிபிசிடிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், சேலம்-சென்னை ரயிலில் ரூ5.78 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோரை சென்னையில் சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> சேலம் ரயில் கொள்ளை வழக்கு – குற்றவாளிகள் 2 பேர் கைது

Search

Back to Top