நக்சல்கள் தாக்குதல்: காயமடைந்த வீரர்களுக்கு முதல்வர் ஆறுதல்
India, naxal, raipur, solider April 25, 2017,
ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் காயமடந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் அம்மாநில முதல்வர்சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பேஜி கிராமத்தை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தும் நோக்கில், நேற்று பிற்பகல், பயங்கர ஆயுதங்களுடன் வந்த 300 நக்சலைட்டுகள், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில், 26 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். தகவலறிந்த சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், நேற்று டில்லி பயணத்தை ரத்த செய்துவிட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்கள் அம்மாநில முதல்வர் ரமண்சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விரைவி
ல் குணமடைய பிரார்த்திப்பதாக கூறினார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.