3வது நாளாக இன்றும் தினகரன் ஆஜராக உத்தரவு
criminal court, dinakaran, double leaf symbol, India, New delhi April 24, 2017,
புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்துள்ள புகாரில், தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று 2 வது நாளாக விசாரணை நடத்தினர் .சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்த நிலையில் இன்று (24ம்தேதி) மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிட்டப்பட்டுள்ளது.
போன் அழைப்புகள் ஆய்வு:
சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தினகரனின் செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
ஒரே வரியில் பதில்:
தினகரன், தரகர் சுகேஷ் சந்திரா, நண்பர் மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகிய நால்வரிடமும் விசாரணை நடக்கிறது. விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் தினகரன் ஒரே வரியில் பதில் கூறுவதால் விசாரணை தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் ஆஜராக உத்தரவு:
சுமார் 10 மணி நேரம் தொடர்ந்த விசாரணை நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைந்தது. விசாரணைக்கு பின்னர் இன்று (24ம்தேதி) மாலை 4 மணிக்கு மீண்டும் தினகரன் ஆஜராக வேண்டும் என டில்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகியோர் மதியம் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தவிடப்பட்டுள்ளது. இரவு 1.30 மணியளவில் தினகரன் விசாரணை முடிந்து புறப்பட்டார்.
English summary:
NEW DELHI: The Delhi Criminal Court today ordered prosecution for bin Laden’s bribe to get a bribe to get a double leaf symbol. The investigating agency has been ordered to appear for the second day at 4 pm on Tuesday (24th May).
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.