முதல்வர்கள் இணைந்து செயல்படுங்கள்:பிரதமர்

chief minister, India, narendra modi, New delhi
புதுடில்லி:அனைத்து முதல்வர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் புது இந்தியா சாத்தியமாகும் என பிரதமர் மோடி கூறினார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. 3வது முறையாக இந்த கூட்டம் நடந்தது. இதில் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: புது இந்தியா உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நிதி ஆயோக் எடுத்துள்ளது. அரசின் உத்தரவுகளை மட்டும் பின்பற்றி நிதி ஆயோக் செயல்படவில்லை. நிபுணர்கள், வல்லுநர்கள் இதில் உள்ளனர். மாநில அரசு கொள்கை முடிவில் தங்களது பங்களிப்பை அளிக்கின்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல்வர்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் புது இந்தியா சாத்தியமாகும்.
ஜிஎஸ்டி மசோதா, ஒரே நாடு, ஒரே நம்பிக்கை, ஒரே இலக்கு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top