ஆபாச பேச்சு புகார்: கேரள அமைச்சர் ராஜினாமா

A.K.Saseendran, India, kerala, thiruvananthapuram
திருவனந்தபுரம்: பெண்ணுடன் போனில் ஆபாச பேச்சு பேசியதை தொடர்ந்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.கே. சசிந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கேரள மாநில போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் ஏ.கே. சசிந்திரன். இவர் 5 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். இவர், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண் ஒருவருடன் மொபைல் போனில் மிகவும் ஆபாசமாக பேசியதாக தனியார் டிவி செய்தி வெளியிட்டது. அவரது பேச்சு அடங்கிய ஆடியோவையும் ஒளிபரப்பியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால் தன் மீதான புகாரை அமைச்சர் மறுத்தார்.
இந்நிலையில், கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சசிந்திரன், பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியல் நாகரிகம் கருதி பதவி விலகுகிறேன். பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top