கழிவுநீர் தொட்டியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை
tami nadu August 24, 2018,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கி காட்டு மக்னா யானை பரிதாபமாக உயிரிழந்தது.
55 வயது மதிக்கத்தக்க மக்னா யானை, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளாக சுற்றித் திரிந்தது. ஓவேலி என்னுமிடத்தில் முகாமிட்ட மக்னாவை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். கிராமப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் வழியாக சென்ற மக்னா, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியை கடந்து செல்ல முயன்றது. எதிர்பாராதவிதமாக தொட்டியின் மேல் பகுதி உடைந்ததால், யானையின் வலது முன்னங்கால் அதில் சிக்கிக் கொண்டது.
கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டதால் தொட்டியில் இருந்து வெளியேற முடியாமல் மக்னா தவித்தது. அதனை மீட்பதற்காக வனத்துறையினரும், அப்பகுதி மக்களும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பின் மக்னா உயிரிழந்தது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அதன் உடலை வெளியே எடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> கழிவுநீர் தொட்டியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை