இட ஒதுக்கீடுக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
tami nadu August 23, 2018,
தமிழக அரசு வலிமையாக வாதிட்டு, 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எள்ளளவும் இடையூறு ஏற்படாதவாறு பாதுகாத்திட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பொறுத்துக்கொள்ள முடியாத, சமூக நீதிக்கு எதிரான ஆதிக்க சக்திகள் மீண்டும் தலை தூக்கியிருக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றம் பலமுறை 69 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்தும், ஏற்றுக்கொள்ள மனமின்றி வழக்கு தொடரும் போக்கு அதிகரித்து வருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, தமிழக அரசு நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி திறமையாக வாதிட்டு, 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எள்ளளவும் இடையூறு ஏற்படாதவாறு பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நீட், ஸ்டெர்லைட் போல் இட ஒதுக்கீடு பிரச்னையில் தமிழக அரசு குழப்பமான அணுகுமுறையை மேற்கொண்டால் வரலாறு மன்னிக்காது என்பதை உணர்ந்து விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> இட ஒதுக்கீடுக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்