மகாராஷ்டிரா. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: பிரதமர் மோடி நன்றி

BJP, India, maharashtra, mumbai, narendra modi
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் பா.ஜ. பெருவாரியான வார்டுகளை பிடித்தது. இத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ. என்றுமே வலுவான நிலையில் உள்ளதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது . பா.ஜ. மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த மகாராஷ்டிரா சகோதர, சகோதரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
முதல்வர் பட்னாவிஸ் கூறியதாவது: இந்த வெற்றி பிரதமர் மோடியின் திறமையான நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி. என தெரிவித்துள்ளார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top