இந்தியன் பிரிமீயர் லீக் ஏலம் : பல வீரர்கள் விலை போகவில்லை

bangalore, India, indian cricket, indian premier league
பெங்களூரு : இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் சீசன் – 10போட்டிகள் ஏப்ரல் 5 ம் தேதி துவங்கி, மே 21 வரை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. இதில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் இன்று நடந்தது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் ஏலம் போகவில்லை. இயான் மோர்கன் ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.வீரர் மேத்யூசை, டில்லி அணி, 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

ஏலம் போகாத வீரர்கள் விபரம் : மார்டின் குப்தில், ஜாசன் ராய், பைஸ் பாசல், அலெக்ஸ் ஹாலிஸ், ரோஸ், டெய்லர், சவுரப் திவாரி. மொத்தம், 352 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். இதில், 76 பேர் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top