தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசம் : ஸ்டாலின்
chennai, MK stalin, tamil nadu February 21, 2017,
சென்னை : எண்ணூரில் கொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகாவின் குடும்பத்தினரை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதற்கு ரித்திகா கொலை உதாரணம். சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டிய போலீஸ், கூவத்தூரில் பாதுகாக்கிறது. சட்டசபையில் எங்களை தாக்கத் தான் போலீஸ் இருக்கிறது. சிறுமி, பெண்களை பாதுகாக்க அதிமுக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.